ராசிபுரம்: ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது ஈச்சர் வேன் மோதியதில், நாமகிரிப்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் அமுதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்புப் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.