ராணிப்பேட்டை அருகே பஞ்சராகி நின்ற சரக்கு லாரி மீது மோதி கார் மோதி 3 பேர் பலி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் குடிமல்லூரில் பஞ்சராகி நின்ற சரக்கு லாரி மீது மோதி கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையை அடுத்த குடிமல்லூரில் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி மீது மோதி கார் மோதியதில், காரில் பயணித்த 2 ஆண்கள் 1 பெண் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் காயமடைந்த 3 குழந்தைகள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வாலாஜாபேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விபத்திற்கு உள்ளானவர்கள் வேலூருக்கு திதிக்காக சென்று வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இவர்கள் அனைவரும் சென்னையை சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் மாற்றம் தீயணைப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

திதிக்காக சென்று வந்தவர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தாரினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!

வரும் 20ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவு; நாளை மறுநாள் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.! 49 எம்பி பதவிக்கு 695 பேர் போட்டி

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு!