வயநாடு : ஜனநாயகத்தை பாதுகாக்க வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ளச் செய்தியில்,”நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கப் போகும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று. அடுத்த அரசாங்கம் சில பில்லியனர்களின் ஆட்சியா? 140 கோடிஇந்தியர்களின் ஆட்சியா என்பதை உங்கள் வாக்கு தீர்மானிக்கும். வீட்டை விட்டு வெளியே வந்து அரசியலமைப்பு சட்டத்தின் சிப்பாய் ஆகி ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.