சண்டிகர் : I.N.D.I.A.கூட்டணி ஆட்சியமைப்பதற்கு முன்பே யார் பிரதமர் என சண்டை போட்டு வருகின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஹரியானாவில் பேசிய அவர், “5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை வைத்து ஆட்சி நடத்த I.N.D.I.A.கூட்டணி ஆலோசிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதிக்கவில்லை. மோடி உயிருடன் இருக்கும் வரை எஸ்.சி.,எஸ்.டி., இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது,”இவ்வாறு தெரிவித்தார்.