புதுக்கோட்டை: புள்ளான்விடுதி, வானக்கன்காடு, சூரக்காடு உள்ளிட்ட 30க்கும்மேற்பட்ட கிராமங்களில் மின் தடை செய்யப்பட்டுள்ளது. சூறாவளி காற்றால் மின் கம்பிகள் மீது மரங்கள் சாய்ந்து மின் தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மின்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.