கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர் மோடி நடந்து கொள்கிறார்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி கீழ்த்தரமான அரசியல்வாதி போல நடந்து கொள்வதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே; தேர்தல் களத்தில் நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களை கண்டு மோடி அச்சமடைந்து இருப்பதாக தெரிவித்தார். அச்சத்தின் காரணமாகவே மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதாகவும், 400 தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் ஊழல்வாதிகளை பாஜக-வில் இணைப்பது ஏன்? என்றும் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவை எப்படி ஒற்றுமையாக வைத்திருப்பது என்று தெரிந்துகொள்ள வரலாற்றை மோடி படிக்க வேண்டும் என்றும் தெரிவித்த அவர், கீழ்த்தரமான அரசியல்வாதி போல மோடி நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டினார். பாஜக-வின் வாக்குறுதிகளில் ஒன்றை கூட பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என்றும், ஊழலை ஒழிப்பதாக சொல்லிக்கொண்டே 400க்கும் அதிகமான எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியுள்ளதாகவும் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

 

Related posts

47வது கோடை விழா இன்றுடன் நிறைவு ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஸ்ரீவரதராஜபெருமாள் கோயிலில் இன்று தேரோட்டம் கோலாகலம்: காஞ்சியில் பக்தர்கள் குவிந்தனர்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா என்ற சத்யநாராயணன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு