திருவனந்தபுரம்: உடல்நலக்குறைவால் நேற்று காலமான கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் உடலுக்கு, வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான புதுப்பள்ளிக்கு உடல் சாலை வழியே கொண்டு செல்லப்படுகிறது.