கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பி.யாக அங்கீகரிக்கக்கூடாது: சி.வி.சண்முகம் பேட்டி

டெல்லி: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பி.யாக அங்கீகரிக்கக்கூடாது என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை மக்களவை சபாநாயகரிடம் அளித்த பின் சி.வி.சண்முகம் பேட்டியளித்தார். ரவீந்திரநாத்தை அதிமுக உறுப்பினராக கருதக்கூடாது என்று சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். பழனிச்சாமியின் கோரிக்கை குறித்து ஆராய்ந்து முடிவு எடுப்பதாக சபாநாயகர் உறுதி அளித்ததாக சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

Related posts

மன்மத ராசா.. மன்மத ராசா.. கன்னி மனச கிள்ளாதே… பிரபல மேட்ரிமோனியல் மூலமாக 50 பெண்களை வீழ்த்திய மன்மதன்

நிலைக்குழு தேர்தலில் கவுன்சிலர்களை இழுக்க பாஜ ரூ.2 கோடி பேரம்

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை