டெல்லி: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பி.யாக அங்கீகரிக்கக்கூடாது என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை மக்களவை சபாநாயகரிடம் அளித்த பின் சி.வி.சண்முகம் பேட்டியளித்தார். ரவீந்திரநாத்தை அதிமுக உறுப்பினராக கருதக்கூடாது என்று சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். பழனிச்சாமியின் கோரிக்கை குறித்து ஆராய்ந்து முடிவு எடுப்பதாக சபாநாயகர் உறுதி அளித்ததாக சி.வி.சண்முகம் தெரிவித்தார்.