திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவுக்கு தனி விமானங்களை இயக்க அனுமதி கோரி ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு தனி விமானங்களை இயக்க அனுமதி கோரி ஒன்றிய அமைச்சருக்கு எழுதிய கடிததில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.