இதனால் அந்த நிறுவனத்தின் கஸ்டமர் கேர் எண்ணை தொடர்புகொண்டு பேசியபோது, எதிர்முனையில் பேசிய ஒருவர் தங்களது நிறுவன செயலியை பதிவிறக்கம் செய்து, அதை ஸ்கேன் செய்தால் மீண்டும் உணவுக்கான பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு வந்துவிடும் என்று தனலட்சுமியிடம் கூறியுள்ளார். அதன்படி தனலட்சுமியும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து ஸ்கேன் செய்தார். அப்போது அவருடைய வங்கி கணக்கிலிருந்து ₹40 ஆயிரம் திருடப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த தனலட்சுமி, எஸ்பிளனேடு குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதுகுறித்து ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.