சியோல்: நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வியடைந்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது. வட கொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வியடைந்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது. இது குறித்து வட கொரிய அரசின் மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உளவு செயற்கைக்கோளை சுமந்து கொண்டு விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட், முதல் மற்றும் 2ம் கட்ட நிலைகளை பிரச்சினைகளுடன் கடந்து சென்ற போது நடுவானில் வெடித்து கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் விழுந்தது. தவறு சரிசெய்யப்பட்டு இரண்டாவது முறை மீண்டும் விண்ணில் செலுத்தப்படும்,” என்று கூறப்பட்டுள்ளது.