சென்னை: போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் மெத்தாம்பிட்டமைன் போதைப் பொருளை பதுக்கி வைத்திருந்த ராகுல், காதர் மைதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.