விருதுநகர்: கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த வழக்கில் நிர்மலாதேவிக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று நிர்மலாதேவி வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவிகள் திருமணமாகி நல்லநிலையில் உள்ளனர். சாட்சிகள் முறையாக இல்லை. இதையெல்லாம் நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நிர்மலா தேவி தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.