மெட்ரோ ரயில் அமைப்பதால் மேற்கொள்ள வேண்டிய பணிகள், கட்ட வேண்டிய பால எண்ணிக்கை, சுரங்கப்பாதை அமைவிடம், தற்போதைய கட்டுமான விபரம், மெட்ரோ ரயில் தண்டவாளம் அமைக்க பூமிக்கடியில் கான்கிரீட் தூண் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை உத்தேச வழித்தடத்தில், 500 மீட்டருக்கு ஒரு இடத்தில் ஆழ்துளையிட்டு மண் மாதிரி எடுக்கப்படுகிறது. தற்போது 75க்கும் மேற்பட்ட இடங்களில் துளையிட்டு மண் தர பரிசோதனை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 50 இடங்களில் மண் ஆய்வுப்பணிகள் முடிந்துள்ளன. மாட்டுத்தாவணி, உத்தங்குடி, ஒத்தக்கடை பகுதியில் சுமார் 13 முதல் 15 மீட்டரில் கடினமான பாறை தென்படுகிறது. அதன் மாதிரியை ஆழ்குழாய் இயந்திர ஒட்டுனர்கள் சேகரித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் வழங்கி வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.