கள்ளிக்குடியில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்: ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு

 

திருமங்கலம், மே 9: அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. நேற்று கள்ளிக்குடி ஒன்றியத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைத்து பேசினார். அவர் பேசுகையில், அதிமுகவால் முகவரி கிடைத்தவர்கள் இன்று கட்சிக்கு துரோகம் செய்து வருகின்றனர். துரோகிகளை வீழ்த்தி கட்சியை எடப்பாடி பழனிச்சாமி மீட்டெடுத்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் 1.5 கோடி தொண்டர்களை கொண்டிருந்த அதிமுக தற்போது 2 கோடி தொண்டர்கள் உள்ள இயக்கமாக மாற்ற முயற்சித்து வருகிறார் என்றார். இந்நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன், திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன், துணை செயலாளர் தமிழ்செல்வன், இளைஞர் பாசறை செயலாளர் ஆர்யா, மீனவரணி செயலாளர் சரவணபாண்டி, கள்ளிக்குடி யூனியன் சேர்மன் மீனாட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் 1 கோடி குடும்பமும் தலா 10 மர கன்றுகள் நட்டு கோடை கால கூடைப்பந்து பயிற்சி நிறைவு விழா

2030ல் பசுமையான தமிழகம் உருவாக்குவோம் கரூர், திருச்சி பைபாஸ் சீத்தப்பட்டி பிரிவு மேம்பால குகை வழிப்பாதையில் குடிமகன்களின் நடமாட்டம்

மயிலாடுதுறையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு