மதுரை: மதுரை செந்தலைப்பட்டியில் கோயில் சித்திரை திருவிழாவில் மஞ்சுவிரட்டு நடத்த ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கியுள்ளது. மஞ்சுவிரட்டு, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் விதிமீறல் இருந்தால் அடுத்த முறை தடை விதிக்கப்படும் என நீதிமன்றம் கூறியுள்ளது. செந்தலைப்பட்டியை சேர்ந்த செல்வம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.