நாகை: நாகை செருதூர் கிராம மீனவர்கள் பைபர் படகில் கோடியக்கரை இருந்து 15 நாட்டிகல் தென் கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரும்பு கம்பி மற்றும் கட்டையால் மீனவர்களை தாக்கி கொள்ளையர்கள், மீனவர்களிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி மற்றும் வலை உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.