கொடைக்கானல்: தொடர் மழையால் குறிஞ்சி ஆண்டவர் கோயில் செல்லும் பிரதான சாலையில் மரம் முறிந்து விழுந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்