கேரளா மாநிலம் கண்ணூரில் கார் – லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கண்ணூரில் கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தில் 9 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். புன்னச்சேரி அருகே நேற்றிரவு இந்த கோர விபத்து நடந்துள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

அதில் காரை ஓட்டிச்சென்ற காசர்கோடு காலிச்சநடுக்கம் சாஸ்தம்பாறையைச் சேர்ந்த பத்மகுமார் (59), பீமநதியைச் சேர்ந்த சூரிக்காட் சுதாகரன் (52), சுதாகரன் மனைவி அஜிதா(35), அவரது தந்தை கொழுமாள் கிருஷ்ணன் (65) 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். அஜிதாவின் தம்பி அஜித்தின் மகன் ஆகாஷ் (9) என்ற சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், காரின் பின்னால் வந்த லாரி காரின் மீது அதிவேகத்தில் மோதி விபத்தி ஏற்படுத்தியதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். லாரி ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்த விபத்து தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

நல்ல செய்தி

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்க பாஜ வலியுறுத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்