இஸ்லாமாபாத் :காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானைச் சேர்ந்த நிறுவனம் ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளது. புல்வாமா தாக்குதல் நடந்த சில வாரங்களுக்கு பிறகு பாகிஸ்தான் நிறுவனம் நன்கொடை வழங்கியது அம்பலமாகி உள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஹப் பவர் நிறுவனம் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கியுள்ளது. புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில் பாகிஸ்தான் நிறுவன நிதியால் பலன் என விமர்சனம் எழுந்துள்ளது.