அதேபோல ராஜஸ்தானிலும் மக்களை கவரும் வகையில் இலவச அறிவிப்பு திட்டங்களை முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்து வருகிறார். இதற்கு முன் ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாங்க மாதம்தோறும் ரூ.500 மானியம் வழங்கப்படும் என அறிவித்து அதனை செயல்படுத்திய அசோக் கெலாட் தற்போது 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 100 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் ஏற்கனவே உள்ள நிலையான கட்டணத்தை செலுத்தினால் போதும் என்று அவர் கூறியுள்ளார்.