வேலூர்: காட்பாடி வழியாக எர்ணாகுளம் செல்லும் பயணிகள் ரயிலில் 23 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். காட்பாடி அருகே ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் 14 மூட்டைகளில் கடத்திச் சென்ற கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ரயிலில் கஞ்சா கடத்தியதாக கேரளாவை சேர்ந்த ஆகாஷ், மனோஜ்குமார், பிரதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.