முக்கிய வீதிகளின் வழியாக மேளதாளங்களுடன் வந்தபோது, அம்மையப்பன் நகர் பகுதியை சேர்ந்த பாரதிதாசன் என்ற வாலிபர், அங்கிருந்த மின் கம்பத்தின் மீது ஏறி, கால்களால் கம்பத்தை பின்னிக்கொண்டு தலைகீழாக தொங்கியபடி சாகச நடனமாடினார். பின்னர் தலைகீழாக இறங்கியவரை, சிலர் தாங்கி பிடித்து இறக்கிவிட்டனர். இதை சிலர் செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி உள்ளனர். இதை பார்த்து மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். ஊர்வலம் செல்லும்போது, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, ஊர்வலம் முடிந்ததும் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் வாலிபருக்கு அசம்பாவிதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.