ராஞ்சி: ஜார்க்கண்டில் காங்கிரஸ் எம்எல்ஏ பிரதீப் யாதவ் மீதான பண மோசடி வழக்கில் அவரது வீடு, அலுவலகம் உள்பட 12க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தி வருகிறது. பொரையாகத் தொகுதியில் இருந்து 5 முறை எம்எல்ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரதீப். இவர் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும் உள்ளார். யாதவ் நிலக்கரி வர்த்தகம் , சிவில் ஒப்பந்தங்களை நிறைவேற்றுதல், இரும்பு தாது பிரித்தெடுத்தல் மற்றும் இரும்பு தயாரித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுடன் சேர்ந்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை கடந்த ஆண்டு சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.