கோவை: ஈஷா மையத்தில் பணியாற்றி காணாமல் போன 6 பேரில் 5 பேர் திரும்பி வந்துவிட்டனர் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. காணாமல்போன தன்னுடைய சகோதரரை மீட்டுத் தரக் கோரி திருமலை என்பவர் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இதுவரை 36 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஈஷா யோகா மைய ஊழியர்கள், தன்னார்வலர்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம் என காவல்துறை தெரிவித்திருக்கிறது.