சென்னை: அப்பாவி உழவர்களின் நிலங்களை என்.எல்.சி. நிறுவனம் பறிக்க அரசு அனுமதிக்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதை அரசும், என்.எல்.சி.யும் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.