பின்னர் பேசிய அவர், “இந்திய கணிதம், கட்டுமான கலைகள், உலோக அறிவியல், வானியல் அறிவியல் உள்பட அனைத்திலும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வேதங்களே முன்னோடியாக இருந்தன. ஆனால் அவை பின்னாளில் ஆங்கிலேயர்களின் கண்டுபிடிப்புகள் என்ற பெயரில் இந்தியாவுக்கு திரும்பி வந்தன. அறிவியல் கோட்பாடுகளின் உண்மையான பிறப்பிடமே வேதங்கள் தான். வேத காலத்திலிருந்தே இந்தியா அறிவார்ந்த சமூகமாக இருந்துள்ளது. சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட இந்திய இலக்கியங்கள் வளம் மிக்கவை” என்று தெரிவித்தார்.