தங்க சுரங்கத்தில் தீ விபத்து 27 தொழிலாளர் பரிதாப பலி

லிமா: தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டின் லாஎஸ்பெ ரான்சா மாகாணம் அரேக்யூபா நகரில் தங்க சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென சுரங்கம் முழுவதும் பரவியது. கடும் புகை மூட்டமும் ஏற்பட்டது. இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர். இந்த தீயில் சிக்கி மூச்சு திணறியும், உடல் கருகியும் 27 தொழிலாளர்கள் பலியாயினர். உடல் கருகிய நிலையில் 2 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Related posts

கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

சென்னை கோயம்பேட்டில் முன்விரோதம் காரணமாக கொலை

தமிழ்நாட்டில் 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 6ம் மற்றும் மே 10ம் தேதிகளில் வெளியாகும் என பள்ளிகல்வித்துறை அறிவிப்பு