17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கார் டிரைவர் எஸ்கேப்

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது 17 வயது மகளுடன் தனியே வசித்து வந்துள்ளார். தற்போது பள்ளிக்கு விடுமுறை என்பதால், தனது மகளையும் அப்பெண் வேலைக்கு செல்லும் இடங்களுக்கு அழைத்து வருவது வழக்கம்.

இந்நிலையில், அப்பெண் வேலை செய்யும் ஒரு வீட்டின் கார் டிரைவராக வேலைபார்ப்பவர் அரி (41). இவர், அப்பெண்ணின் 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இதுகுறித்து தனது தாயிடம் அச்சிறுமி கூறி கதறி அழுதிருக்கிறாள். இதையடுத்து கார் டிரைவர் அரியை அப்பெண் கண்டித்து வந்துள்ளார். எனினும், அந்த சிறுமிக்கு கார் டிரைவர் அரி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார். இதையடுத்து கார் டிரைவர் அரி தலைமறைவாகி விட்டார். போலீசார் போக்சோ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

Related posts

நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும்: சிந்தித்து வாக்களியுங்கள்.! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை

ஃபெடரேஷன் கோப்பை ஆடவர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: கும்பக்கரையில் குளிக்க அனுமதி