ஸ்ரீஹரிகோட்டா: ககன்யான் திட்டத்தில் முதல் கட்ட சோதனை முயற்சியில் ஆளில்லா விண்கலம் விண்ணில் அனுப்பப்படுகிறது. விண்கலத்தின் சோதனை பணிகள் முடிவு பெற்று ஏவுவதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் ஆளில்லா விண்கலம் அனுப்பி சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.