கர்நாடகா: பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனும், பாஜக கூட்டணி வேட்பாளருமான பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரஜ்வால் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியானதை அடுத்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் ஜெர்மனிக்கு தப்பிச் சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.