2023-24ம் நிதியாண்டுக்கு 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளின் பணிகளை செயல்படுத்த கலந்தாலோசனை: அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தது

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2023-24 நிதியாண்டிற்கான சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு 50 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. இதில் சென்னை பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் முதற்கட்டமாக 25.4.2023 அன்று வடசென்னை பகுதிகளான கொண்டித்தோப்பில் ரூ.10 கோடி மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் மற்றும் ரத்த சுத்திகரிப்பு மையம் அமைத்தல், தண்டயார்பேட்டையில் ரூ.25 கோடி மதிப்பில் பேருந்து நிலையம் மற்றும் பணிமனை அமைத்தல், காசிமேடு கடற்கரையை ரூ.6 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துதல், மற்றும் மூலகொத்தளத்தில் ரூ.6 கோடி மதிப்பில் சமுதாயக் கூடம் அமைத்தல் போன்ற திட்டங்களுக்காக ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, இத்திட்டங்களை செயல்படுத்த திட்டங்களின் வடிவமைப்பு, திட்டக்கூறுகள், திட்டங்களில் அளிக்கப்படும் பொது வசதிகள், அவற்றின் பராமரிப்பு தேவைகள், பயனாளிகளுக்கான வசதிகள் ஆகியவற்றை சென்னை மாநகராட்சி, வருவாய்த் துறை, போக்குவரத்துத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் கட்டிட வடிவமைப்பாளர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, திட்டப்பணிகளை விரைந்து கொள்ளுமாறு அமைச்சர் வலியுறுத்தினார்.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் அபூர்வா, ஆர்.கே.நகர் எம்எல்ஏ எபிநேசர், சென்னை பெருநகர வளர்ச்சி‌க் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி, மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி நகரமைப்புக் குழுத் தலைவர் இளைய அருணா, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் (பொ) இளங்கோவன், அரசு சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி, சி.எம்.டி.ஏ. தலைமை திட்ட அமைப்பாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

நாலாம் தேதிக்கு அப்புறம் நம்ம கையில தான் கட்சி என குஜாலாக இருக்கும் சின்னமம்மியின் ஆதரவாளர்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

வியட்நாம் அதிபரானார் டோ லாம்