டெல்லி :அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கை ஜூலை 19-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. திண்டுக்கல் மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அங்கித் திவாரி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.