இது குறித்து காங்கிரஸ் சமூக ஊடகத் துறை தலைவர் சுப்ரியா ஸ்ரினேட் தனது டிவிட்டர் பதிவில், ‘‘தேர்தல் ஆணையம் நீக்க உத்தரவிட்ட பதிவுகளில் தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவும் ஒன்று. தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்னையை எழுப்பிய பதிவை நீக்க உத்தரவிட்டது ஆச்சரியமாக இருக்கிறது. ஏன் தேர்தல் ஆணையம் அவ்வாறு உத்தரவிட்டது?’’ என கேட்டுள்ளார்.