மக்களவை தேர்தலில் குலாம்நபி ஆசாத் போட்டியில்லை

நகர், ஏப்.18: ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி “ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி”(டிபிஏபி) என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். மக்களவை தேர்தலில் காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் – ரஜோரி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிப்பு வௌியானது. இந்நிலையில் குலாம்நபி ஆசாத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என அக்கட்சி தெரிவித்துள்ளது. அவருக்கு பதில் வழக்கறிஞர் சலீம் பர்ரே அனந்த்நாக் – ரஜோரி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்செக்ஸ் 534 புள்ளிகள் சரிந்து 73,953 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!

யூடியூபர் இர்பான் விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்தது சுகாதாரத்துறை!!

மாருதி பிரான்க்ஸ் டெல்டா பிளஸ்