இதனால் கோத்தகிரி அதனை சுற்றியுள்ள எஸ்.கைக்காட்டி, கக்குளா, ஓம் நகர், புதூர், டானிங்டன், கேர்பெட்டா, இடுகொரை, காக்கா சோலை, கேர்கம்பை உட்பட சுமார் 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன் படுத்தக்கூடிய முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஈளாடா தடுப்பணையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை எனவும், இந்த தடுப்பணையில் எதிர் வரும் காலங்களில் விவசாயத்திற்கு ஏற்ற நீர்வரத்து அதிகரித்து காணப்படும் எனவும் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் எதிர் வரும் பருவமழை காலங்களிலும் அணையில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கும் என்பதால் பொதுமக்கள் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என மகிழ்ச்சி தெரிவித்தனர்.