சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான இடத்தில் அமலாக்கத்துறையினர் 3வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். செட்டிநாடு குழுமம் வெளிநாட்டில் ரூ.110 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் வாங்கியதற்கான ஆவணங்களும், பல்வேறு வங்கிகளில் நிரந்தர வைப்புத்தொகை வைத்ததற்கான ஆதாரத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.