சென்னை: திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தைத் தான் அணுக வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. உச்சநீதிமன்றத்தைத் தான் அணுக வேண்டும் என்ற உத்தரவு நகலை தேர்தல் ஆணையம் நாளை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்த திமுகவின் வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டது.