புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 20 பேர் கொரோனா வைரஸ் தாக்கி பலியாகி உள்ளனர்.நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 3720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை 40,177ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 20 பேர் தொற்று பாதிக்கப்பட்டு பலியானார்கள். இதனால் தொற்றால் இதுவரை நாடு முழுவதும் பலியானவர்கள் எண்ணிக்கை 5,31,584ஆக உயர்ந்துள்ளது.