டெல்லி: டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையருடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்தித்து வருகின்றனர். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, காங். சார்பில் அபிஷேக் மனு சிங்வி, திரிணாமுல் எம்பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் முழுமையாக வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவீதத்துடன் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையையும் வெளியிட வலியுறுத்தப்பட்டுள்ளது.