பலத்த போலீஸ் படை சிறை வளாகத்திற்கு வந்துள்ளது, மூத்த அதிகாரிகளும் வந்து நிலைமையை பார்வையிட்டனர். மேலும் மோதலில் காயமடைந்த கைதிகள் தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அனுமதிக்கப் பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மையில் திகார் சிறையில் ரவுடி கும்பலை சேர்ந்த தில்லு எதிர்த்தரப்பு கைதிகளால் தாக்கி கொல்லப்பட்டார். அவரின் கொலை தொடர்பாக சிறையில் இருந்து 80 காவல்துறை அதிகாரிகள் கடந்த வாரம் இடமாற்றம் செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.