சென்னை: இறந்துபோன மகளின் ஜீவனாம்ச நிலுவை தொகையை பெற அவரது தாய்க்கு உரிமை உண்டு என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுராந்தகத்தை சேர்ந்த அண்ணாதுரை – சரஸ்வதி விவாகரத்து பெற்ற நிலையில் மாதம் ரூ.7,500 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ரூ.6.22 லட்சம் நிலுவை தொகுதியை வழங்கக் கோரி சரஸ்வதியின் மனு நிலுவையில் இருந்தபோது மரணமடைந்தார். தாயார் ஜெயாவை வழக்கில் இணைத்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாதுரை வழக்கு தொடர்ந்திருந்தார்.