இதை எடுப்பதற்காக சிலர் தொட்டியின் மீது இருந்த மின்மாற்றியில் இணைப்பை துண்டித்து விட்டு தீப்பந்தத்தோடு எறியுள்ளனர். அப்போது அவர்கள் பொதுமக்களை கண்டதும் தொட்டியிலிருந்து இறங்கி அங்கிருந்த சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து தப்பியோடினர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் நிகழ்விடத்திற்கு சென்று குடிநீர்த்தொட்டியை பார்வையிட்டனர்.
அப்போது தொட்டியின் கீழ் இருந்த தேனீக்களின் கூடு தீவைத்து அழிக்கப்பட்டிருந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர். ஆனால் தேனீக்களின் கூட்டை அழிப்பதுபோல் நடித்து குடிநீரில் விஷம் கலந்து இருக்கலாம் என்று பொதுமக்கள் குறி பரபரப்பு ஏற்படுத்தினர். இதை அடுத்து தொட்டியில் இருந்த 3 லட்சம் லிட்டர் குடிநீரை வெளியேற்றி பேரூராட்சி ஊழியர்கள் தொட்டியை சுத்தம் செய்தனர். முன்னதாக தொட்டியில் இருந்து 5 லிட்டர் தண்ணீரை சேகரித்து பகுப்பாய்வு சோதனைக்காக சென்னை கிண்டியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. பகுப்பாய்வு முடிவு வந்ததும் அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.