சென்னை: சென்னை செம்மொழி பூங்காவில் நடைபெற்ற மலர் கண்காட்சியை 25,000 பேர் பார்வையிட்டதாக தோட்டக் கலைத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கலைஞர் பிறந்தநாளை ஒட்டி கடந்த 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெற்றது. 43 வகையான மலர்கள், கிருஷ்ணகிரி, ஓசூர், மதுரை, குமரி, நீலகிரியில் இருந்து கொண்டுவரப்பட்ட மலர்களை கொண்டு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.