சென்னை: சென்னையில் கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இருள் கவிந்துள்ளது. காற்றுடன் கருமேகங்கள் சூழ்ந்திருப்பதால் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தியாகராயர் நகரில் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன. மெரினாவில் கருமேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் பலத்த காற்று வீசி வருகிறது.