சென்னை: ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இன்றைய திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். சர்.பிட்டி தியாகராயரின் 173-வது பிறந்த நாளை ஒட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் அரசியல் போக்கை நிரந்தரமாக மாற்றியமைத்த வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்த நாள் இன்று என உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.