புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரை சேர்ந்த தோட்டக்கலை அதிகாரி, தன்னுடன் பணிபுரியும் ஜூனியர் ஊழியர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்டவற்றை பெற்றுதருவதாக கூறி ரூ.10லட்சம் லஞ்சமாக பெற்றுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைக்கு பின் லஞ்சம் பெற்ற அதிகாரி சரப்ஜித் சிங் மற்றும் இடைத்தரகர் கோஹர் அகமது தர் ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது.இருவரது வீட்டிலும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.3.5லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.