டெல்லி: காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கிறது. குழு தலைவர் வினீத் குப்தா தலைமையிலான கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் பங்கேற்கிறார். காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். உத்தரவின்படி கர்நாடகம் நீர் திறக்கவில்லை என இன்றைய கூட்டத்தில் புகார் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.