ஆற்றில் படகு கவிழ்ந்து 6 பேர் பலி

ஸ்ரீநகர், ஏப்.17: ஜம்மு காஷ்மீரில் கந்தபால் நவ்காம் அருகே ஜீலம் ஆற்றில் நேற்று பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர். 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் 6 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். படகில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது உள்ளிட்ட விவரங்கள் முழுமையாக தெரியவில்லை. எனினும் சிறுவர்கள் உட்பட படகில் 15 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகின்றது.

Related posts

தனியார் பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!