ரயில்வே அமைச்சர்- மம்தா திடீர் மோதல்: பாலசோர் மாவட்டத்தில் ரயில் விபத்து நடந்த பகுதியை பார்வையிடுவதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று காலை வந்தார். விபத்து நடந்த பகுதியில் மம்தா பேட்டியளிக்கையில்,‘‘ விபத்தில் பலி எண்ணிக்கை 500 ஆகியுள்ளதாக தனக்கு தகவல் வந்துள்ளது’’ என்றார். அவர் அருகே நின்றிருந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறுக்கிட்டு,ஒடிசா அரசின் தரவுகளின்படி மொத்த பலி எண்ணிக்கை 238 ஆகியுள்ளது’’ என்றார். மம்தா பதிலளிக்கையில்,‘‘ 238 பேர் பலி என்பது வெள்ளிக்கிழமை இரவு நிலவரம். இன்னும் 3 பெட்டிகளில் மீட்பு பணிகள் முடிவடையவல்லை. இதனால் பலி அதிகரிக்கலாம். கிழக்கு மண்டலத்தில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் விபத்துகளை தடுக்கும் கவாச் கருவிகள் பொருத்தப்படாததால்தான் பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது’’ என குற்றம் சாட்டினார்.